
அதன்படி அடுத்த தலைமுறையைினரை கவரும் வகையில் எங்களது குறிப்பிட்ட வங்கிகளில் ரோபோகளை பணியமர்த்த முடிவு செய்துள்ளோம். அடுத்த 18 முதல் 24 மாதங்களில் எங்களது குறிப்பிட்ட வங்கி கிளைகளில் இதனை முன்னெடுக்க உள்ளோம்.
முதல் கட்டமாக வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்குல், கணக்கு தொடங்குதல், வங்கியில் பணம் செலுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படும் ரோபோகள் அடுத்த கட்டமாக வாடிக்கையாளர்கள் லாக்கர்களை பராமரிக்கும் பணியிலும், அடுத்தடுத்த வங்கி பணிகளிலும் ரோபோகள் ஈடுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு அடுத்தபடியாக முத்ரா கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பணிகளிலும் ரோபோகள் ஈடுபடுத்தப்படும். மாநிலங்களின் தலைமை அலுவலகங்களில் ரோபோகள் பயன்படுத்தப்பட உள்ளது. 2030ம் ஆண்டுக்குள் எங்கள் வங்கிகளில் 50 ரோபோகளை ஈடுபடுத்த ஆலோசித்துள்ளோம். கடந்த 18 மாதங்களில் 42 லட்சம் வாடிக்கையாளர்களை புதிததாக பெற்றுள்ளோம்.
கடந்த ஜூன் 30ம் தேதி வெளியான தரவுகளின் படி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 3,250 கிளைகளுடன் 41 மில்லியன் ஆக்டிவ் வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
asianetnews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments