லெபனானை ஆக்கிரமித்ததா இஸ்ரேலியப் படைகள்?...ஹெஸ்புல்லா போராளிகளின் பதில்

லெபனானை ஆக்கிரமித்ததா இஸ்ரேலியப் படைகள்?...ஹெஸ்புல்லா போராளிகளின் பதில்

ஹெஸ்புல்லா போராளிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை வேரறுப்பதற்காக தனது தரைப்படைகள் இரவில் லெபனானுக்குள் நுழைந்ததாக இஸ்ரேல் கூறியது.

இதற்கிடையில், இஸ்ரேலியப் படைகள் லெபனானுக்குள் நுழைந்ததற்கான எந்த விதமானஅறிகுறிகளை தாங்கள் காணவில்லை என்றும், அவர்களை எதிர்கொள்ள தனது படைகள் தயாராக இருப்பதாகவும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

எல்லைக்கு அப்பால் உள்ள ஒரு குறுகிய நிலப்பரப்பில் ஊடுருவல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் கூறியது. ஆனால் லெபனானின் பெரும்பகுதிக்குள் இருக்கும் மக்களை வெளியேற்றும் எச்சரிக்கைகளையும் அது வெளியிட்டுள்ளது, இது ஒரு பெரிய அளவிலான தரைவழிப் படையெடுப்பு என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.

சமீபத்திய நாட்களில், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களின் ஹெஸ்பொல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லாஹ் மற்றும் அவரது உயர்மட்டத் தளபதிகள் பலரைக் கொன்றது. மற்றும் நூறாயிரக்கணக்கான லெபனானியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியது. அக்டோபர் 8 முதல் ஹெஸ்பொல்லாவின் இடைவிடாத ஏவுகணைத் தாக்குதல்களால் வடக்கில் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்களை அவர்களது வீடுகளுக்குத் திருப்பி அனுப்ப தரைவழி நடவடிக்கை அவசியம் என்று இஸ்ரேல் கூறுகிறது.

இந்நிலையில் தரைவழித் தாக்குதலை நடத்தப் போவதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்திருந்த நிலையில் நேற்று லெபனானுக்குள் நுழைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதேநேரம் ஹெஸ்புல்லா போராளிகள் அந்த செய்தியை மறுத்துள்ளது."இஸ்ரேலியப் படைகளுக்காக நாங்கள் காத்துகொண்டிருக்கின்றோம்.அவர்கள் பொய்யான செய்திகளை வெளியிடுகின்றனர்.அப்படி அவர்கள் வந்தால் திரும்பிப் போக முடியாத அளவுக்கு தாக்குதல் இருக்கும் "என்று  ஹெஸ்புல்லா போராளிகள் தெரிவித்துள்ளனர்.



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post