ஹெஸ்பொல்லாவின்அதிரடியில் சிக்கித்தவிக்கும் இஸ்ரேலிய பயங்கரவாதிகள்!

ஹெஸ்பொல்லாவின்அதிரடியில் சிக்கித்தவிக்கும் இஸ்ரேலிய பயங்கரவாதிகள்!

கடந்த 24 மணி நேரத்தில் தெற்கு லெபனானில் ஹெஸ்பொல்லாவுடன் நடந்த போர்களில் 3 அதிகாரிகள் மற்றும் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்தது, மேலும் லெபனான் போர்முனையில் போர் தொடங்கியதில் இருந்து அதன் இறப்பு எண்ணிக்கை 57 அதிகாரிகள் மற்றும் வீரர்களாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவ அறிக்கையின்படி, இறந்தவர்களில் ஒருவர் இராணுவத்தின் படைப்பிரிவு ஒன்றில் தலைவர் என்றும் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் இருவர் முதல் சார்ஜென்ட் தரத்தில் உள்ளவர்கள் என்றும், மற்ற இருவரும் சார்ஜென்ட் தரத்தில் இருந்தவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் “கார்மேலி” படையணியின் 222 வது பட்டாலியனில் பணியாற்றுபவர்கள் என்றும் அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

பதுங்கியிருந்த இரண்டு வீரர்கள் படுகாயமடைந்ததாகவும், வடக்குப் போர்முனையில் நடந்த மற்ற போர்களில் 4 வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் Yedioth Ahronoth ஊடகம் தெரிவித்துள்ளது.

மறுபுறம், தெற்கு லெபனானில் நடந்த போர்களில் Oktz பிரிவில் முதல் சார்ஜென்ட் பதவியில் உள்ள ஒரு  தளபதி கொல்லப்பட்டதாகவும்  இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

லெபனான் போர்முனையில் நடந்த போர்களின் விளைவாக  டஜன் கணக்கான இஸ்ரேலிய இராணுவத்தினர்  மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மாஸ்டர்



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post