கடமையை சிறப்பாக புரியும் இலங்கை சிறைச்சாலை வைத்தியர்கள்!

கடமையை சிறப்பாக புரியும் இலங்கை சிறைச்சாலை வைத்தியர்கள்!

சிறை செல்லும் செல்வாக்கு மிக்கவர்கள் அடுத்த நிமிடமே சிறைச்சாலையில் உள்ள வைத்திய சாலைக்கு மாற்றப்படுவது நீண்ட காலமாக இலங்கையில் நடைமுறையில் இருந்த கலாச்சாரமாகும். பிரபலங்களின் வழக்குகள் தீர்ப்பு எழுதப்படும் முன்னரே அவர்களுக்கு வைத்தியசாலை அறைகளும் தயாராகி விடுகின்றன.

ஆட்சி மற்றத்தின் பின்பு மருத்துவர்கள் செல்வாக்கு மிக்க கைதிகளின் உடல்நிலையை சரியாக கண்டறியும் தைரியம் பெற்றுள்ளனர். 

அண்மையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட அர்ஜுன் அலோசியஸஸின் உடல் நிலை பறிசோதிக்கப்பட்ட பின்பு அவரது உடல் நிலை சீராக இருப்பதனால் மீண்டும் சிறைச்சாலை அறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

கால ஓட்டத்தின் மாற்றங்கள்,  ஆட்சி மாற்றத்தின் தாக்கங்கள்  சட்டங்கள்  சரியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதற்கான மற்றொரு நல்ல அறிகுறியாகும் .

மேலும் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலை மருத்துவமனையில்  சிறை தண்டனை அனுபவித்து வரும்  துமிந்த சில்வாவின்  உடல்நிலை மறுபரிசீலனை செய்யப்பட்டு அவர் நலமுடன் இருந்தால் அறைக்கு மாற்றப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

வேட்டை நிருபர் 




 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post