ஒரே நாளில் 23 பற்கள் பிடுங்கப்பட்டு புதிதாக 12 பற்கள் வைக்கப்பட்ட நபர் மாரடைப்பால் மரணம்

ஒரே நாளில் 23 பற்கள் பிடுங்கப்பட்டு புதிதாக 12 பற்கள் வைக்கப்பட்ட நபர் மாரடைப்பால் மரணம்


சீனாவில் ஒரே நாளில் 23 பற்கள் பிடுங்கப்பட்டு புதிதாக 12 பற்கள் வைக்கப்பட்ட நபர், மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் மகள் சமூக வலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும், பற்கள் பிடுங்குவதற்கு அளிக்கப்பட்ட மருந்தின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டதா? அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

“ஒரே சமயத்தில் இத்தனை பற்கள் தான் பிடுங்க வேண்டும் என்ற அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல் எதுவும் இல்லை. இருப்பினும், நடைமுறையில் 10 பற்கள் என்ற வரம்பு உள்ளது.

ஆனால், 23 பற்களை பிடுங்குவது என்பது மிகவும் அதிகம். இதற்கு அனுபவம் இருந்தால் மட்டும் போதாது, நோயாளியின் உடல் திறனையும் கருத்தில் கொள்வது அவசியம் என்று மூத்த பல் மருத்துவர் ஒருவர் கூறியிருந்தார்.

nambikkai



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post