காங்கேசந்துறை துறைமுகம் அபிவிருத்திக்கு இந்தியா உதவி

காங்கேசந்துறை துறைமுகம் அபிவிருத்திக்கு இந்தியா உதவி

காங்கேசந்துறை துறைமுகத்தை 61.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில் நவீனமயமாக்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுர குமார திசாநாநாயக்கவிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை ரயில்வே திணைக்களத்துக்கு 22 டீசல் இயந்திரங்களைப் பரிசாக வழங்குவதற்கும் இந்தியா தீர்மானித்துள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதியிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதன்போது கலந்துரையாடியுள்ளார்.

tamilmirror



 



Post a Comment

Previous Post Next Post