Ticker

6/recent/ticker-posts

Ad Code



மருதப்"பா"வரங்கம்-19



உவமைக் கவிஞர் சுரதா
"பார்சுரதா பாரின்பயன்"

சொல்புதிதாய்ச் சீர்தளையால் சொக்கவைக்கும் பாவலனே
வல்வினை தீர்க்க வடித்திழைத்தான்--

நெல்மணியாய்

நேர்நின்று நம்முள் நிறைவளிக்கும் நீரருவி
"பார்சுரதா"பாரின் பயன்:
    
ஜகதீஷ் சந்திரபோஸ்
"வாய்த்த ஜகதீஸ் வரம்"

(நேரிசை வெண்பா)

தாவரங்கள் நம்தோழர் தாழ்வில்லா நேயத்தால்
ஆவரம்பூ அண்ணாச்சி ஆர்த்திடுவீர்--

தேவரென

ஆய்ந்தே தெரிவித்த ஆற்றலின் தேர்வன்றோ
வாய்த்த ஜகதீஷ் வரம்:

தமிழ்
"வாய்மொழி ஈன்றவள்"

கலி மண்டிலம்

அடிகள் தோறும் 11 எழுத்துகள்:
"தாய்தான் எம்தமிழ் தாழ்ந்திடா தென்றுமே"

"சேய்கள் பேணியே சீர்தரும் முன்னிலை"
"ஆய்வில் தேர்வென ஆங்கவள் ஓங்குவாள்"

"வாய்மை எண்ணிலா வாய்மொழி ஈன்றவள்"
    
(தொடரும்)

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments