Ticker

6/recent/ticker-posts

Ad Code



வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-80


405.வினா : எது நட்பன்று? 
விடை : முகம் சிரிக்கப் பழகுவது மட்டும் நட்பாகாது 
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு.(786)

406.வினா:எது நட்பு?
விடை: உள்ளன்புடன் மனம் மகிழும்படி பழகுவதே நட்பு
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு.(786)

407.வினா:மானம் காக்கும் நட்பு எது?
விடை:துன்பத்தில் விரைந்து காப்பதே 
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு(788)
ALLSO READ...CLICK HERE👇
408.வினா : ஆராயாமல் ஏற்கும் நட்பு எத்தகையது?
விடை: இறுதியில் தெரிந்தே சாவது போன்ற துன்பம்தரும்
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரம்  தரும்.(792)

409. வினா :கொடுத்தும் கொள்ள வேண்டிய நட்பு எது? 
விடை: பழிக்கு வெட்கப்படுபவன் நட்பை 
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு(794)

(தொடரும்)

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments