
கடினமான காலங்களில் என்னைத் தொடர்ந்து ஆதரித்து வரும் உண்மையான நண்பர் துருக்கி அதிபர் எர்டோகன்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
எர்டோகனின் இரண்டு நாள் மலேசியா பயணத்தின் போது புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் பேசிய அவர்,
துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனை தனது மிகவும் கடினமான காலங்களில் தொடர்ந்து ஆதரித்த வருகிறார்.
மேலும் துருக்கித் தலைவருடனான தனது உறவு, கஷ்டங்களின் மூலம் உருவாக்கப்பட்ட பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது.
எனது கடினமான காலங்களில் எர்டோகனும் அவரது குடும்பத்தினரும் தன்னையும் அவரது மனைவி டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலையும் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டதை பிரதமர் நினைவு கூர்ந்தார்.
இந்த ஆதரவு தற்செயலாகவோ அல்லது அரசியல் ஆதாயத்திற்காகவோ வடிவமைக்கப்பட்டதல்ல. இது தூய சகோதரத்துவம்.
உங்கள் கருணையை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.
மலேசியர்கள் அதை ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று அவர் கூறினார்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments