Ticker

6/recent/ticker-posts

Ad Code



வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-83


420. வினா : பகைவரின் வணக்கம் எதைப் போன்றது? 
விடை: வளைந்த வில் போன்றது 
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான்.(827)  

421. வினா : பகைவரின் கண்ணீர் எத்தகையது? 
விடை : வணங்கிய கைகளில் கொலைக்கருவி இருப்பதைப் போல 
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து.( 828 )

422. வினா : பேதையினும் பேதையார் யார்? 
விடை : கற்றறிந்து, எடுத்துரைத்து, தான் அடங்கா  திருப்பவர் 
ஓதிஉணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான்அடங்காப் பேதையிற் பேதையார் இல்.( 834 )

423. வினா : வெண்மை எனப்படுவது யாது? 
விடை: தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவமே 
வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு. (844)
 
424. வினா : உயிர் போகும் அளவிற்குத் தீராத நோய் எது? 
விடை: பிறர் சொல்வதும் கேளாது, தானும் செயல்படாதவன் செயல் 
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய். (848)

(தொடரும்)

Email;vettai007@yahoo.com




Post a Comment

0 Comments