
நேரங்கள் பொடுபோக்காக கரைகிறது
தொலைந்தவர்களுக்காகவும்
தொலைத்தூரத்தவருக்காகவும்
நேரம் கொடுக்கப்படுகிறது....
அருகிலிருப்போர் கவனமற்று
மறக்கும் நிலையாகி விட்டது...
இங்கிதம் இல்லாமல்
முலங்குகிறது இடியென
பேச்சுக்கள் ..
சங்கீதம் போல
சுவாரசியமாகிறது
தேவையற்ற செயற்பாட்டு
கோட்பாடு ..
நாளடைவில் பேசும்
மனித நபரின்
பெயரும் மறந்தே விடுகிறது..
உணர்வை மதியாது
ஏனோ தானோ என்ற
உறையாடலால்
நீடித்த நேரம் மற்றும் தானே
எஞ்சமாக சொல்லும்
நினைவில் நின்று ....
பேசும் போது
யருக்கெல்லாம் பழக்கம்
விழிப்பார்த்து பேச
எவரானாலும் கதையாடல்
தொடரும் போதே
விழி நோக்கி பேசுங்கள் ..
அவ்வாறெனும்
போது தானே
எம் வார்த்தைக்கான
பிரதிபலிப்பு கொடுக்கும்
மாற்றத்தை அவர்கள்
விழிகளில் படிக்கலாம் ..
முன்னேறும் போது
முன்னோக்கு பார்வையை
சீராக்கம் கொள்
சஹ்னாஸ் பேகம்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments