
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் சட்டப் பிரிவு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் ஏராளமான மனுக்கள் மற்றும் தீர்ப்புக்களை தேர்தல் ஆணைக்குழு தாமதித்தே பெற்றுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களும் மனுக்கள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளின் நகல்களை சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மாவட்டத் தேர்தல் அலுவலகங்களில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொள்கிறது.
இந்த முடிவுகளை ஆய்வு செய்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யும் என்று தேர்தல் ஆணைக்குழு கூறுகிறது.
தேர்தல் திகதிகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். மே 6 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments