Ticker

6/recent/ticker-posts

Ad Code



கலங்குகிறேன் நானே!


நெஞ்சுக்குள் குழியிட்டு
நீராகக் குருதியிட்டு
பொத்திப் பொத்தி 
வளர்த்து வந்தேன்
ஆசையொன்று.

பூவாட்டம் வாசமில்லை 
தேராட்டம் அழகுமில்லை .
ஆனாலும்  தேவையானதே
அந்த ஆசை
சின்னப் பொண்ணு எனக்கு. 

காதலென்று பேரிட்டு
கண்மணியாள் உள்ளத்திலே
வேர் விட்ட ஆசையது.
தேசமெல்லாம் பேர் போனது 
தேவையானதே இவளுக்கும்.

ஊரும் உறவும் பார்த்திடாமல் 
நரம்போடு எலும்பாலும்
வேலியிட்டு வளர்த்து வந்தேன்  .

ஊருக்கும் தெரியவில்லை
உற்றவனும் அறியவில்லை 
ஊமைக் காதலதை.

வளராமல் வாடுதே 
முளையிலே கருகுதே
காதல் செடி கானல்நீர் 
இட்டால் காணாமல் 
போயிடுமோ 
கலங்குகிறேன் நானே.

ஆர்.எஸ்.கலா 

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments