Ticker

6/recent/ticker-posts

Ad Code



இந்தியப் பெருங்கடல் சக்தியாக திட்டமிடும் சீனா! இலங்கை தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை


இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைப் பாதிக்கும் அனைத்து முன்னேற்றங்களையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் கடல்சார் சக்தியாக சீனா மாறுவதற்கான நோக்கத்தை இந்தியா அறிந்திருப்பதால் குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்றில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அந்நாட்டின் வெளிவுறவு அமைச்சகம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு பதிலளித்த அந்நாட்டின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், "இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடனான எங்கள் உறவுகள் விரிவானவை மற்றும் நீண்டகாலமாக நிலைத்தவை.

அவற்றின் சொந்த தகுதியின் அடிப்படையில் மற்றும் எந்த மூன்றாம் நாடுகளுடனான அவர்களின் உறவுகளிலிருந்தும் எமது உறவு சுயாதீனமானவை. சீனாவின் 'கடல்சார் சக்தியாக' மாறுவதற்கான குறிக்கோளை அரசாங்கம் அறிந்திருக்கிறது.

இந்த உத்தியின் ஒரு பகுதியாக, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள கடற்கரை நாடுகளில் துறைமுகங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளை சீனா உருவாக்கி வருகிறது.

இலங்கை, மாலைத்தீவு மற்றும் மொரீஷியஸ் போன்ற நாடுகள் இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' கொள்கை மற்றும் மஹாசாகர் தொலைநோக்குப் பார்வையில் ஒரு மைய இடத்தைப் பிடித்துள்ளன.

இந்தப் பிராந்திய நாடுகளுடனான நமது அரசியல் உறவுகள் வலுவாக உள்ளன, வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஒத்துழைப்பு முன்னேறி வருகின்றன.

மேலும் அனைத்துத் துறைகளிலும் பரந்த அளவிலான ஈடுபாடு உள்ளது.

எனினும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனா தனது கடற்படை மற்றும் கடல்சார் இருப்பைக் கொண்டுள்ளது.

இதில் கடற்கொள்ளையர் எதிர்ப்புப் பணிகள், துறைமுக அழைப்புகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் கணக்கெடுப்பு கப்பல்களை அனுப்புதல் ஆகியவை அடங்கும்.” என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ibctamil

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments