
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மகசின் சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.
இந்தநிலையில் ரணிலை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மகிந்த, “அரசியல் செய்தால் இவ்வாறான செயற்பாடுகளை எதிர்கொள்ள வேண்டும். அவர் அதை ஏற்றுக் கொள்வார். அவர் இந்த கைதை அலட்டிக் கொள்ளவில்லை.
அரசியல் தலைவர்களை சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். அரசியலில் ஈடுபடும் போது இவ்வாறான பயணங்கள் சதாரணமானதாகும்.
மக்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நன்கு புரிந்து கொண்டுள்ளனர். இதுபோன்ற செயல்கள், பழிவாங்கல் மட்டுமே நடக்கிறது“ என தெரிவித்தார்.
ibctamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments