
3. நீத்தார் பெருமை
குறள் 21:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு.
ஒழுக்கமான உண்மைத் துறவிகளை நூல்கள் பழுதின்றிப் போற்றும் உணர்.
குறள் 22:
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
இறந்தோர் அளவைக் கணித்தல் அரிது! துறவிப் பெருமையும் தான்.
குறள் 23:
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.
இருநிலை இன்பதுன்பம் நன்கறிந்தே ஆசை அறவே நீக்கல் உயர்வு.
குறள் 24:
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
உறுதியெனும் அங்குசத்தால் ஐம்புலனை வென்றோன் துறவு நிலத்திற்கு வித்து.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments