Ticker

6/recent/ticker-posts

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள அபராத வரி ரத்து? - பொருளாதார ஆலோசகர் சொன்ன தகவல்!


இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள அபராத வரி அடுத்த மாதம் ரத்து செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ள தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், இறக்குமதி வரி 10 முதல் 15 சதவிகிதமாக குறையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பொருட்கள் மீது 25 விழுக்காடு வரி விதித்த அமெரிக்கா, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலும் 25 சதவிகித வரியை அபராதமாக விதித்துள்ளது. இது தொடர்பாக, கடந்த திங்கட்கிழமை, டெல்லியில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க வர்த்தக துணை பிரதிநிதி பிரெண்ட் லின்ச் தலைமையிலான குழுவினர், இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், இந்தியா மீது அமெரிக்கா விதித்த 25 விழுக்காடு அபராத வரி, நவம்பர் மாத இறுதிக்குள் நீக்கப்படும் என்று கூறினார். மேலும், இந்திய பொருட்கள் மீதான வரி 10 முதல் 15 சதவிகிதமாக குறையும் என்றும் ஆனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்க வரி தொடர்பான பிரச்னைக்கு 8 முதல் 10 வாரங்களில் தீர்வு காணப்படும் என்று கூறிய ஆனந்த நாகேஸ்வரன், இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றும் விளக்கம் அளித்தார். இந்தியா-அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையின் அடிப்படையில், தனது உள்ளுணர்வின் வெளிப்பாடு இது என்றும் ஆனந்த நாகேஸ்வரன் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், தான் இந்தியாவுக்கு நெருக்கமானவர் என்றும், பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமானவர் என்று மீண்டும் தெரிவித்துள்ளார். இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீதம் வரி விதித்தது இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரதமர் மோடியை அடிக்கடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டி பேசிவந்தார். இச்சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளுக்கு தொலைபேசி வாயிலாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் டிரம்ப் வாழ்த்து தெரிவித்தார்.

அதில் பிரதமர் மோடி சிறப்பாக பணியாற்றி வருவதாகவும், ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ஒத்துழைப்பு வழங்கும் அவருக்கு நன்றி கூறுவதாக கூறியிருந்தார். இந்நிலையில் இங்கிலாந்து சென்றுள்ள டிரம்ப் அந்நாட்டு பிரதமர் ஸ்டார்மருடன் செய்தியாளர்களை சந்தித்தபோது, ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா மீதான வரியை உயர்த்தியதாக கூறினார். கச்சா எண்ணெய் விலை குறைந்தால் ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

news18

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments