
கைக்குட்டைகளை விற்பனை செய்வதாகக் கூறி தங்க சங்கிலி மற்றும் பணப்பைகளைத் திருடிய ஐந்து பெண்கள் ஹட்டன் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகைக் காலத்தில் பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக ஹட்டன் நகரத்திற்கு வரும் ஏராளமான மக்களுக்கு கைக்குட்டைகளை விற்பனை செய்வதாகக் கூறி இந்த ஐந்து பெண்களும் கடந்த 19 ஆம் திகதி தங்க சங்கிலிகள் மற்றும் பணப்பைகளைத் திருடியபோது கைது செய்யப்பட்டதாக ஹட்டன் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குருநாகல், நாவலப்பிட்டி மற்றும் பவுவாகம பகுதிகளைச் சேர்ந்த இந்தப் பெண்கள், கைக்குட்டைகளை விற்பனை செய்வதாகக் கூறி தீபாவளிக்கு பொருட்கள் வாங்க வந்த ஒரு பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை கொள்ளையடித்துள்ளனர். பணப்பைகளைத் திருடியது தொடர்பாக மற்றவர்கள் கைது செய்யப்பட்டு ஹட்டன் பதில் நீதவான் சஞ்சீவ பொன்சேகாவிடம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தங்க சங்கிலியைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் இந்த மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும், மற்றவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு 21 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments