
குறள் 67:
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.
தந்தை உழைத்துக் குழந்தைகள் ஆற்றலுடன் முன்னேற வைத்தல் கடன்.
குறள் 68:
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
பெற்றோரை விஞ்சும் அறிவார்ந்த பிள்ளைகள் இத்தரணிக் கெல்லாம் பயன்.
குறள் 69:
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.
தன்பிள்ளை போற்றப் படும்போது பெற்றெடுத்த இன்பத்தை விஞ்சும் மகிழ்வு.
குறள் 70:
மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்லெனும் சொல்.
இவன்போல் மகன்பெற என்னதவம் செய்தார்? வியக்கவைத்தல் மைந்தன் கடன்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments