
8.அன்புடைமை
குறள் 71:
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும்.
அன்புகொண்டோர் வாடும் துயர்கண்டால் கண்ணீரோ தன்னால் பெருக்கெடுக்கும் சாற்று.
குறன் 72:
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.
அன்பற்றோர் எல்லாம் தனக்கென்பார்!
அன்புள்ளோர் இன்னுயிரும் ஈவார் பிறர்க்கு.
குறள் 73:
அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு.
இன்னுயிரும் இவ்வுடலும் சேர்ந்தே இருப்பதுபோல் அன்புதான் வாழவின் உயிர்.
குறள் 74:
அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
அன்பே விருப்பத்தைத் தந்தே பழகவைக்கும்! நட்பாக மாறவைக்கும் சாற்று.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments