Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-24


13.அடக்கம் உடைமை

குறள் 121:

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.

அடக்கம் இருந்தால் ஒளிமயமாகும் வாழ்வு! அடங்காமை என்றும் இருள்.

குறள் 122:

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

போற்றும் அடக்கத்தைக் காக்கவேண்டும் செல்வம்போல்! வேறுசெல்வம் இஃதைப்போல் ஏது.

குறள் 123:

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறித் தாற்றின் அடங்கப் பெறின்.

அடக்கம் அறிவுடைமை என்றறிந்து வாழ்த்தால் அகங்குளிர வாழ்த்தும் உலகு.

குறள் 124:

நிலையின் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.

நிலையில் பிறழாமல் தன்னடக்கம் கொள்வோன் பெருமை மலையின் பெரிது.

குறள் 125:

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து.

எல்லோர்க்கும் பண்பே பணிவாகும்/ மேலுமொரு செல்வமாகும் செல்வந்தர்க் காம்.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments