
ஆண், பெண் இருவருக்கும் 40 வயதுக்கு மேல் உடலில் சோர்வு ஏற்படுவதற்கான காரணத்தினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடல் சோர்வு
பொதுவாக 40 வயதை கடக்கும் ஒவ்வொரு ஆண், பெண் இருவருக்கும் உடல் என்பது சோர்வாக மாறிவிடும். சுறுசுறுப்பு இல்லாமல் எப்பொழுதும் ஒரு மந்தமான நிலையை எதிர்கொள்வார்கள்.
மேலும் எந்தவொரு வேலையையும் செய்ய முடியாமல் கஷ்டப்படுவதுடன் 60 வயது ஆகியது போன்ற மனம் சோர்வும் காணப்படும்.
இந்த 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல் சோர்வை உணர்வதற்கான முக்கிய காரணம் முதுமை என்று இருந்தாலும், வாழ்வியல் அழுத்தங்கள் தான் மிக முக்கிய காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிகமான பொறுப்புகள்
அதுமட்டுமின்றி 40 வயதில் குடும்பம் மற்றும் வேலை என வாழ்க்கையில் அதிகப்படியான பொறுப்புகள் அடுத்தடுத்து வருவதால் மூளை அதிக ஆற்றலை உட்கொள்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால் நுணுக்கமான உயிரியல் மாற்றங்கள் சோர்விற்கு காரணமாக இருந்தாலும் 30 வயதிலிருந்தே உடல் தசைகளின் அளவு குறையவும் தொடங்குகின்றதாம்.
பெண்களின் ஹார்மோன் மாற்றம், ஆண்களின் மன அழுத்தம் நமது சோர்வை இரட்டிப்பாக மாற்றுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
manithan

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments