Ticker

6/recent/ticker-posts

தோனிக்கு கிடைக்காத விஐபி வசதி... சச்சினை மட்டும் ஏன் ஏர்போர்ட்டில் சோதனை செய்வதில்லை? உண்மை என்ன? | Sachin Tendulkar


சச்சின் டெண்டுல்கருக்கு விமான நிலையப் பரிசோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விலக்கு தோனிக்கு ஏன் இல்லை? இதோ உண்மையான காரணம்.

கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் மகேந்திர சிங் தோனி, விராட் கோலி ஆகியோருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஸ்டார் வீரர்களான இவர்கள் அனைவரும் விமான நிலையத்துக்குச் செல்லும் போது பலத்த பாதுகாப்பு கொடுக்கப்படும்.

எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும் தோனி, விராட் கோலி போன்றோர் விமான நிலையத்திற்குச் செல்லும்போது ஒரு சாதாரண பயணியைப் போல அதிகாரிகளால் பரிசோதனை செய்யப்படுவர். ஆனால், சச்சின் டெண்டுல்கர் மட்டும் விமான நிலையத்திற்குச் செல்லும்போது, அவர் எந்தவிதமான பாதுகாப்புச் சோதனையும் செய்யப்பட மாட்டார். மேலும் விமான நிலையத்தில் தோனியை விட சச்சினுக்கு ஏன் அதிக வசதிகள் கிடைக்கின்றன?.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய வீடியோவில் கூட, விமான நிலையத்தில் மகேந்திர சிங் தோனி பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்போது, சச்சின் டெண்டுல்கர் எந்தச் சோதனையும் இன்றி உள்ளே அனுமதிக்கப்படுகிறார். இதைப் பார்த்து, இந்த வேறுபாடு ஏன் என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். இந்த வேறுபாட்டிற்குக் காரணம் என்னத் தெரியுமா?

விமான நிலையத்தில் தோனி, விராட் கோலிக்கு கிடைக்காத இந்தச் சிறப்புரிமை சச்சின் டெண்டுல்கருக்கு மட்டும் கிடைத்ததற்கான முக்கிய காரணம், அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதுதான். 2014-ஆம் ஆண்டில், நாட்டின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா விருது சச்சினுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையையும் சச்சின் பெற்றார்.

இந்திய அரசின் விதிகளின்படி, பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்புச் சோதனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்தச் சலுகை அவர்களின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். விருது பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, இது அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கும் பொருந்தும்.

விமான நிலையப் பாதுகாப்புச் சோதனைகளைத் தவிர, பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அதாவது, ஏர் இந்தியா மற்றும் இந்திய ரயில்வேயில் முதல் வகுப்பு அல்லது எக்ஸிக்யூட்டிவ் வகுப்பில் இலவசமாகப் பயணிக்கலாம். அதேபோல், விருது பெற்றவர்கள் எந்த மாநிலத்திற்குச் சென்றாலும், மத்திய அமைச்சரவை அமைச்சர்களுக்கு இணையான அந்தஸ்தைப் பெற முடியும்.

அதோடு, அவர்கள் எந்த நேரத்திலும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கும் உரிமையையும் கொண்டிருப்பார்கள். இது தவிர, தேவைப்படும் போதெல்லாம் அவர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும். மேலும், வெளிநாட்டுப் பயணங்களின் போது அவர்களுக்கு விவிஐபி நெறிமுறை மரியாதைகள் வழங்கப்படும். இந்தச் சிறப்புப் பாதுகாப்பு அரசியலமைப்பு அதிகாரிகள், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள் மற்றும் பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அதோடு, அவர்கள் எந்த நேரத்திலும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கும் உரிமையையும் கொண்டிருப்பார்கள். இது தவிர, தேவைப்படும் போதெல்லாம் அவர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும். மேலும், வெளிநாட்டுப் பயணங்களின் போது அவர்களுக்கு விவிஐபி நெறிமுறை மரியாதைகள் வழங்கப்படும். இந்தச் சிறப்புப் பாதுகாப்பு அரசியலமைப்பு அதிகாரிகள், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள் மற்றும் பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

தோனியும் இந்திய கிரிக்கெட்டிற்கு அளப்பரிய பங்களிப்பை ஆற்றியுள்ளார். மேலும் பத்ம விருதுகளையும் பெற்றுள்ளார். ஆனால், அவருக்கு இன்னும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. தோனி மிகவும் மதிக்கப்படும் ஒருவராக இருந்தாலும், தற்போதைய விதிகளின்படி அவர் வழக்கமான பாதுகாப்புச் சோதனை நடைமுறையை எதிர்கொள்ள வேண்டும். இதனால்தான் விமான நிலையத்தில் சச்சின் மற்றும் தோனிக்கு இடையிலான சோதனை நடைமுறையில் வேறுபாடு காணப்படுகிறது.

news18


 


Post a Comment

0 Comments