
புகழ்
குறள் மொழி 77
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.
குறள் எண் :231
குறள் மொழியின் பொருள் :
ஏழைகளுக்கும். இல்லாதவர்களுக்கும் தானதர்மம் கொடுத்து அதனால் ஏற்படும் புகழுடன் வாழ்தல் வேண்டும். அந்தப் புகழ் பெருமையைவிட மனித உயிருக்குப் பயனுள்ளது வேறு ஒன்றும் இல்லை.
நபிமொழி:
பிறருக்குக் கொடுக்கும் தானதர்மம் இறைவனது கோபத்தை அணைத்து விடும். துர்மரணத்தைத் தடுக்கும் என்று நபிபெருமானார் கூறினார்.
நபி மொழி, ஆதாரம் : அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல் :திர்மிதி 600
பொறையுடைமை
குறள் மொழி 78
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும்.
குறள் எண் :154
குறள் மொழியின் பொருள் :
ஒருவன் தன்னுடைய நற்குணங்கள் தன்னைவிட்டு நீங்காமல் இருக்கவேண்டும் என எண்ணினால் பொறுமையை எப்போதும் விடாது கடைப்பிடிக்க வேண்டும்.
நபிமொழி :
மிகுந்த பொறுமை வேண்டும்.!! நம்பிக்கையாளர்களே! பொறுமையுடன் இருங்கள்; இன்னல்களைச் சகித்துக் கொள்ளுங்கள். நற்பண்பை விடாதீர்கள். நீங்கள் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைவீர்கள்.
இறைவசனம்: திருக் குர்ஆன் 3:200.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments