Ticker

6/recent/ticker-posts

ஈஸ்டர் தாக்குதல்: கோட்டாவுக்கு பயணத்தடை


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான நடப்பு விசாரணைகள் நிமித்தம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் வெளிநாட்டுப் பயணத்தடையை விதித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களிலிருந்து எழும் விடயங்கள் குறித்து தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு கோரி நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை பரிசீலித்த நீதவான், 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

முன்னாள் இராணுவ கர்னல் முஹம்மது அன்சார்

முன்னாள் புலனாய்வு அதிகாரி பிரேமானந்த உடலகம

ஆகியோருக்கு பயணத்தடை விதித்து உத்தரவிட்டார்.

tamilmirror


 


Post a Comment

0 Comments