சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா
உறைசேர் பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா
முறையின்றி யாளு மரசின்னா வின்னா
மறையின்றிச் செய்யும் வினை.
விளக்கம்:
- வேலி இல்லாத கரும்புத் தோட்டத்தைக் காப்பது துன்பமாகும்.
- மழை பெய்தால் ஒழுகக் கூடிய வீட்டில் வசிப்பது துன்பமாகும்.
- ஒழுங்கு முறை இல்லாமல் நடக்கும் ஆட்சியில் வாழ்வது துன்பமாகும்.
- வெளிப் படையாகச் செய்யும் செயல்கள் துன்பமாகும்.
இன்னா நாற்பது:6
அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா
மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுக லின்னா
இடும்பை யுடையார் கொடையின்னா வின்னா
கொடும்பா டுடையார்வாய்ச் சொல்.
விளக்கம்:
- நல்ல மனசு உள்ளவங்க சினத்தில் கூறும் கடும் சொற்கள் துன்பமாகும்.
- மன உறுதி கொண்ட வீரர்கள், போர்க் களத்தில் சோம்பி இருப்பது துன்பமாகும்.
- கஷ்டத்திலிருப்பவர்கள், கொடை கொடுப்பது துன்பமாகும்.
- கொடியவர்கள், கூறும் தீய சொல் துன்பமாகும்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments