
இன்னா நாற்பது - 13.
மணியிலாக் குஞ்சரம் வேந்தூர்த லின்னா
துணிவில்லார் சொல்லுந் தறுகண்மை யின்னா
பணியாத மன்னர்ப் பணிவின்னா வின்னா
பிணியன்னார் வாழு மனை.
விளக்கம்:
- ஓசையின்றி யானையில் அமர்ந்து வரும் மன்னனின் வருகை துன்பமாகும்.
- நெஞ்சில் துணிவில்லாமல் பேசும் வீர வசனங்கள் துன்பமாகும்.
- வணங்குவதற்கு தகுதியற்ற மன்னர்களை. வணங்குவது துன்பமாகும்.
- மனம் ஒன்று பட்டு வாழ முடியாத, குடும்ப வாழ்க்கை துன்பமாகும்.
இன்னா நாற்பது - 14.
வணரொலி யைம்பாலார் வஞ்சித்த லின்னா
துணர் தூங்கு மாவின் படுபழ மின்னா
புணர்பாவை யன்னார் பிரிவின்னா வின்னா
உணர்வா ருணராக் கடை.
விளக்கம்:
- அடர்ந்த கூந்தலை உடைய அழகுப் பெண்கள், கணவனிடம் இணங்கி வாழாமல் இருப்பது துன்பமாகும்.
- கொத்தாகத் தொங்கும் மாம்பழங்கள், யாருக்கும் பயன்படாமல் அழுகி கீழே விழுவது துன்பமாகும்.
- மனமொத்து ஒற்றுமையாய் வாழும் இணையர் பிரிவது துன்பமாகும்.
- புரிந்து கொள்ளும் நிலைமை இருந்தும், ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல் இருப்பது துன்பமாகும்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments