
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டி இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் பின்னணியில், கடந்து சென்ற காலப்பகுதி குறித்த பரந்தளவிலான மறுஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரமிந்து பெரேரா ஆகியோரால் கடந்து சென்ற காலப்பகுதி தொடர்பில் விரிவான பகுப்பாய்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமைச்சரவையில் நியமிக்கப்பட்டிருந்த சட்டத்தரணி நிமல் சிறிபால டி சில்வா, ஜப்பானிய முதலீட்டுத் திட்டமொன்றில் லஞ்சம் கோரியதாக இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதுவர் அன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் முறைப்பாடு செய்திருந்தார் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான ஊழல் நிறைந்த உயர்குடி ஆட்சியை மாற்றியமைத்து, மக்கள் நலன்சார் ஆட்சியொன்றை கட்டியெழுப்பும் முழுமையான செயன்முறையில் இதுவரை அடையப்பட்டுள்ள வெற்றிகள், எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் கீழே உள்ள காணொளியில் சேர்க்கப்பட்டுள்ளன.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments