தேவையான பொருட்கள்:
மட்டன் - 500 கிராம்
காஷ்மீரி வரமிளகாய் - 10 (குறைந்தது 20 நிமிடம் நீரில் ஊற வைத்தது)
தயிர் - 1/2 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - தேவையான அளவு
கருப்பு ஏலக்காய் - 2
பச்சை ஏலக்காய் - 3
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 3
பிரியாணி இலை - 1
வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு கனமான வாணலியில் சிறிது நீரை ஊற்றி, அதில் ஊற வைத்த காஷ்மீரி மிளகாய், சீரகம், கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ஆகியவற்றைப் போட்டு ஒரு கொதி விட்டு இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் உள்ள நீரை தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, மசாலாவை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பெரிய பாத்திரத்தில் மட்டனைக் கழுவிப் போட்டு, அதில் தயிர், சீரகப் பொடி, மல்லித் தூள், மஞ்சள் தூள், ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரைத்த மிளகாய் விழுது சேர்த்து நன்கு பிரட்டி, ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
பின்பு ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, 2-3 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மசாலாக்களை வேக வைத்து எடுத்து வைத்துள்ள நீரையும் ஊற்ற வேண்டும்.
பின்னர் தேவையான அளவு நீரை ஊற்றி, மூடி வைத்து 20-25 நிமிடம் மட்டனை வேக வைக்க வேண்டும். மட்டன் நன்கு வெந்ததும், அதில் கரம் மசாலாவை சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு, ஒரு கொதி வந்ததும், கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ராஜஸ்தானி லால் மாஸ் தயார்.
நிர்மலா மொரீசியஸ்
Tags:
சமையல்