தாயிற் சிறந்த கேடயம் இல்லை

தாயிற் சிறந்த கேடயம் இல்லை


தனயன் சிறக்கத் 
தியாகம் செய்வாள்
துன்பங்கள் தாங்கித்
துணை நின்றிடுவாள்
தன்னிகரில்லாச் சேவை
தன்னலமின்றிச் செய்வாள்
தனியாய்க் காத்திடும்
தயாள குணத்தாள்
ஒளியாய் மாறி
வழியைக் காட்டுவாள்
அறிவை வளர்க்க
அருந்தவம் புரிவாள்
அவனியில் தன்னை
அர்ப்பணிப்புச் செய்வாள்
கேடுகள் பொறுத்தே
கேடயம் ஆவாள்
குழந்தையின் சிரிப்பில் 
குதூகலம் கொள்வாள்
கவலை துடைத்துக்
கருணை புரிவாள்
இரணங்கள் பொறுத்த
இராணி அவளே
ஈடில்லா உறவு 
உலகினில் தாயே

Post a Comment

Previous Post Next Post