கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலை அதிபர் M.S.M.இக்பால் அவர்கள் காலமானார்.இன்னாளில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஹூன் .
கடந்த அக்டோபர் மாதம் கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலைக்கு புதிதாக நியமனம் பெற்று வந்த அதிபர் இக்பால் அவர்கள் பாடசாலையின் வளர்ச்சிக்கு மிகவும் உன்னதமான திட்டங்களை வகுத்துள்ளதாக வேட்டைக்கு தெரிவித்திருந்தார்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உழைப்பதாக எமக்கு தெரிவித்தார் .
அக்குரணை அஸ்ஹர் பாடசாலையில் ஆசிரியராகவும் அதிபராகவும் ,உக்குவளை அஜ்மீர் பாடசாலையில் அதிபராகவும் கடமை புரிந்துள்ளார்.
அன்னாரின் இழப்பு மிகவும் வேதனையளிக்கின்றது.
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தார்களுக்கும் ,மற்றும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொல்கின்றோம்
அல்லாஹ்விடமிருந்து வந்தோம் அவனிடமே செல்கின்றோம்.
அதில் எவருக்கும் விதி விலக்கில்லை.
.இன்னாளில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஹூன் .
Tags:
அஞ்சலி