அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
இலங்கையில் ஒரு நாடு ஒரு சட்டம் என்ற தலைப்பின் கீழ் இயங்கி வரும் ஜனாதிபதியின் சேட் குழுவினால்
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முஸ்லிம் தனியார் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதற்கான சாட்சியங்கள் திட்டமிட்டு பதிவு செய்யப் படுகின்றது என்ற விடயம் வெளியாகியுள்ளது
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் என்று அடையாளப் படுத்தப்பட்ட சிலரின் வாக்கு மூலங்கள் மாத்திரம் பதியப் படுவது
முஸ்லிம் தனியார் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கான ஒரு சதியாக பார்க்கலாம்
ஒரு வழக்கு பதியப்படும் சந்தர்ப்பங்களில் அந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கினால்
நிச்சயமாக ஒரு தரப்பிற்கு சாதகமும் இன்னொரு தரப்பிற்கு பாதகமாகவும் அமையும் என்பது யதார்த்தமான உண்மை
.காதி மன்றங்களில் விசாரிக்கபடுகின்ற வழக்குகள் ஏனைய நீதிமன்றங்களில்போல தீர்ப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் மேன் முறையீடு செய்யலாம்
.எமது சமூகத்திற்கு இருக்கின்ற உரிமைகளை எந்த சந்தர்ப்பத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது என்ற காரணத்தினால்
இந்த ஜனநாயக நாட்டில் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப் பட்டுள்ள யாப்பின் அடிப்படையில்
எமக்கான உரிமைகள் பறிக்கப்படும் சந்தர்ப்பங்களில் ஜனநாயக ரீதியில் எமது எதிர்ப்பை தெரிவிப்பது அவசியம் என்ற விடையத்தை நினைவு படுத்துகிறோம்.
எமது உரிமைகளை பாதுகாத்து கொள்வதற்காக இலங்கை முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் அனைவரும் எமது உரிமை எமக்கு வேண்டும் என்ற அடிப்படையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்து ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைப்பதுடன்நாடளாவிய ரீதியில் 2022/ஜனவரி மாதம் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் முன்பாக
சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் கண்டனப் போராட்டத்தை நடத்துவோம்
ஒன்றுபடுவோம் வென்றெடுப்போம்
நன்றி
இப்படிக்கு உலகளாவிய சமூக வலைதளங்களின் நடுநிலைவாத அமைப்பு
-----------------------------------------
வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com
Tags:
RinTv