சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கத்தினை சுவீகரித்த முல்லைத்தீவு யுவதி

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கத்தினை சுவீகரித்த முல்லைத்தீவு யுவதி


பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கத்தினை சுவீகரித்த முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

கணேஷ் இந்துகாதேவி சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக இவ்வாறான வெற்றிகளைக் குவித்து வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
கணேஷ் இந்துகாதேவி தந்தையினை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பிலேயே வசித்து வருகின்றார். கணேஷ் இந்துகாதேவியின் வெற்றியில் அவரது தாயார் படும் துன்பங்கள் மறைந்து போயுள்ளன.

இப்படியானதொரு தங்க மகளை நாட்டிற்கு தந்த கணேஷ் இந்துகாதேவியின் தாயாருக்கு எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன், கணேஷ் இந்துகாதேவி தொடர்ச்சியாக சர்வதேச அரங்கில் வெற்றிகளைக் குவிக்க அனைத்து தரப்பினரும் அவருக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post