8 குழந்தைகளை பெற்ற தாயை கழுத்தில் சங்கிலியால் கட்டிப்போட்டு சித்திரவதை

8 குழந்தைகளை பெற்ற தாயை கழுத்தில் சங்கிலியால் கட்டிப்போட்டு சித்திரவதை


சீனாவில் 8 குழந்தைகளை பெற்ற தாயை கழுத்தில் சங்கிலியால் கட்டிப்போட்டு ஒரு சிறிய குடிசைப்பகுதியில் அடைத்து வைத்திருப்பது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Douyin என்ற நபர் சங்கிலியால் ஒரு பெண் கட்டிப்போட்டு வைத்திருக்கும் தகவல் அறிந்து, அந்த பெண்ணை சந்திப்பதற்காக அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள குடிசைப் பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த பெண்ணின் கழுத்தில் சங்கிலிகள் பூட்டப்பட்டு மிக சிறிய ஒரு இடத்தில் அடைத்து வைத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பனி அதிகமாக விழும் காலகட்டத்தில் மிகவும் லேசான துணியை மட்டுமே உடுத்திருத்த அவருக்கு கதகதப்பான துணிகளை வழங்கிவிட்டு அவரிடம் பேச முற்பட்டுள்ளார் ஆனால் அதற்கு சரியாக பதில் அளிக்கவில்லை.  பின்பு அது தொடர்பான விடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளிட்டார்.

அந்த வீடியோ தற்போது சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதனை கண்டித்துள்ள நிலையில், சீனாவில் குடும்ப கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படும் போது இவர் 8 குழந்தைகளை பெற்றுருப்பதை ஏன் அதிகாரிகள் கவனிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்த பொலிசார் விசாரணையில், Feng County Huankou Township பகுதியை சேர்ந்த yeng என்ற பெண் schizophrenia என்ற மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை இவ்வாறு கட்டிப்போட்டு வைத்துள்ளதாக அவரது கணவர் Dong மற்றும் அவரது குடுப்பதினார் தெரிவித்துள்ளனர்.  மேலும் இதுகுறித்த விசாரணை தொடரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பொலிசார் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், மேலும் அவரது குழந்தைகளை மாநில குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

Vettai Email-vettai007@yahoo.com  

Post a Comment

Previous Post Next Post