விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ஒன்றோடு ஒன்று தவறுதலாக மோதிக்கொண்டது. இதைத் தொடர்ந்து இரண்டு விமானங்களும் கீழே விழுந்து நொறுங்கி வெடித்து சிதறியது. அங்கு பெரும் தீப்பிழம்பு ஏற்பட்டு விமானங்கள் எரிந்து சாம்பலாகின. சாகச நிகழ்ச்சியை பார்க்கவந்தவர்கள் இந்த விபத்துக் காட்சியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். அவசர கால மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இரு விமானங்களிலும் 6 பேர் பயணித்திருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோர விபத்து காரணமாக அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து அங்கிருந்தவர்களின் செல்போனில் வீடியோவாக பதிவான நிலையில், இரு விமானங்களும் மோதிக்கொள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக கூறிய டெல்லாஸ் மேயர் எரிக் ஜான்சன், உள்ளூர் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மீட்பு பணிகளில் துரிதமாக செயல்படுவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக FAA அமைப்பு விசாரணை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்