கோவை மாவட்ட உலகத் திருக்குறள் கூட்டமைப்பு "பேரூர் கல்வி மாவட்ட மகளிர் அணி கிளை துவக்க விழா

கோவை மாவட்ட உலகத் திருக்குறள் கூட்டமைப்பு "பேரூர் கல்வி மாவட்ட மகளிர் அணி கிளை துவக்க விழா


உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தமிழ்நாடு மேற்கு மண்டலம் கோவை வருவாய் மாவட்டத்திலுள்ள பேரூர் கல்வி மாவட்டத்தின் மகளிர் அணி கிளை துவக்க விழா கோவை சுக்ரவார் பேட்டை கிளை அலுவலகத்தில் 17 ஏப்ரல் ஞாயிறன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு உலகத் திருக்குறள் கூட்டமைப்பின்  துணைத் தலைவரும், மேற்கு மண்டல மாவட்டத் தலைவருமான குறள் ஆசான்,தமிழ்ச் செம்மல் முனைவர் மு க அன்வர் பாட்ஷா அவர்கள் தலைமை வகித்தார்

பிரபா செந்தில்குமார் அவர்கள் வரவேற்புரையாற்ற, கோவை,நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் கோவை வருவாய் மாவட்ட அமைப்புச் செயலாளருமான கவியகம் மணிவண்ணன் அவர்கள் முன்னிலை வகித்து அறிமுக உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் பேரூர் கல்வி மாவட்ட  மகளிர் அணியின் கிளையின் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பெற்று மாவட்டத் தலைவர் குறள்யோகி முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்களால்  அறிவிக்கப்பட்டனர்.

அதன்படி மகளிர் அணி கிளை பொறுப்பாளர்களில் தலைவராகத் திருமதி  பிரபா செந்தில்குமார் அவர்கள், துணைத் தலைவர்களாகத் திருமதி  இரா.லலிதாம்பிகை,மற்றும் திருமதி சி.பிரபா அவர்களும், செயலாளராகப் திருமதி த.கார்த்திகா அவர்களும், துணைச் செயலாளர்களாக திருமதி சி.பூர்ணிமா, செல்வி. ச.சௌமியா மற்றும் பொருளாளராகத் திருமதி  இரா.வாணி பிரபா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

தேர்வுசெய்யப்பட்ட பொறுப்பாளர்கள்
அனைவரையும் வரவேற்று கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆதிலிங்கம் அவர்கள் இணையவழி காணொளி மூலமாக வாழ்த்துகளைத்  தெரிவித்தார்.

கூட்டத்தில் பூர்ணிமா ஸ்ருதி, வித்யவிகாசினி, ஆராதனா, முனியம்மாள், காளியப்பன், செந்தில்குமார், ஜெயராமன்  உள்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக மகளிர்அணியின்  துணைத் தலைவர் திருமதி இரா.லலிதாம்பிகை  நன்றி கூற நிகழ்வு இனிதே நடந்தேறியது.
வேட்டை நிருபர்- தமிழ்நாடு 
Vettai Email-vettai007@yahoo.com

1 Comments

  1. அருமையான பதிவாக உள்ளது...உங்களுடைய அறப்பணி மேன்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
Previous Post Next Post