Ticker

6/recent/ticker-posts

உனக்காய் ஒரு மடல்


உனக்காய் ஒரு மடல் வரைகிறேன்
எண்ணக் கிடக்கைகளை எழுத்திலே தருகிறேன்

என் நினைவு உன்னோடு கண்ணே
என்றுமே வாழ்விலே நீதான் மானே

மறப்பேனோ மதியே வாடாத மலரே
மங்கிய ஒளியிலும் மின்னிடும் பொன்வண்டே

கடலோடு உரசும் அந்திச் சூரியனே
கவிதையாய்ப் பொழிந்தாயே கருத்தினில் நிறைந்தாயே

சிரிப்பினில் நெருப்பை மூட்டும் பேரழகே
சிருங்கார சுரங்கள் மீட்டிடும் யாழே

உள்ளங்கள் சேர்ந்து ஒன்றானது இன்றே
உதிரத்தில் கலந்து ஓடுகிறாய் நன்றே

Dr ஜலீலா முஸம்மில்

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

0 Comments