மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றத்தின் முப்பெரும் விழா

மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றத்தின் முப்பெரும் விழா


௦2 - 04 -2022 சனிக்கிழமை அன்று மேல்மருவத்தூர் A.V.K. மஹால் கலையரங்கத்தில் மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றத்தின் சார்பாக,
1)ஐந்தாம் ஆண்டு விழா.,                                        
2)கலை இலக்கியப் பெருவிழா.,                              
3)110 சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா 
என முப்பெரும் விழா சீரோடும்., சிறப்போடும் நடைபெற்றது.
விழாவில் கலைமாமணி பா.இராஜகோபால் அவர்கள்.,
சென்னை.

கலைமாமணி அ.பழனியாபிள்ளை அவர்கள்., 
மேலக்காண்டை.

டாக்டர் S.R.இரவிச்சந்திரன் அவர்கள்.,சென்னை.

முனைவர் மு.பாட்டழகன் அவர்கள்., சென்னை.
தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர் தமிழ்ச் செம்மல்., குறள்யோகி முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்கள்,கோவை.,

பாவலர் ஆறுசெல்வன் அவர்கள்.,புதுச்சேரி.

கவிஞர் தமிழ் அமுதன் அவர்கள் 
ஆகியோர் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர்.
விழாவிற்கு அரிமா சங்க துணை ஆளுநர் திரு மதியழகன் அவர்கள் தலைமை ஏற்று உரையாற்றினார்.

திரு.வெற்றிச்செல்வன் அவர்கள் வரவேற்புரை கூற,கனவு தமிழ் மாத இதழாசிரியர் திரு அக்கினி பாரதி  அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
திருக்குறள் தூதர், தமிழருவி, முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்கள் எழுச்சிமிக்க சிறப்புரை ஆற்றினார்.
 
விழா ஏற்பாட்டினை மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றத்தின் செயலாளர் தமிழ்ப் பிரியன், தமிழக திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத் தலைவர் தமிழமுதன் அவர்கள்,ஆடிட்டர் என்.சிவப்பிரகாசம் அவர்கள் உள்ளிட்ட விழாக் குழுவினர் சிறப்பாகச் செய்து இருந்தனர்.
விருதுகள் விற்பனைக்கல்ல. உண்மையான தகுதிவாய்ந்த சாதனையாளர்களுக்கு மட்டுமே.எனும் முழக்கத்துடன்,பரதம்,நடனம், இசை,யோகா,சிலம்பம் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த, கோவை தமிழறிஞர் முனைவர் மு.க.அன்வர் பாட்சா, திருநங்கை மதுமிதா கோமதிநாயகம், சென்னை.,மாஸ்டர்.டாக்டர் வி.சர்வேஷ்.,சிங்கப்பூர் மில்லத் அஹ்மத்,சௌதி அரேபியா சிங்கை விஜய் தமிழன்., படையல் சிவா,திருமதி மகபூப் பேகம்,கவிஞர் துரைசாமி, திருமதி பிரபா செந்தில்குமார், செல்வி சுதந்திர நாச்சினி உட்பட110 பல்துறை சாதனையாளர்களுக்கு 
விழாவில் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

சான்றோர்களும்,பொதுமக்களும் அரங்கம் நிறைந்து வந்திருந்து கண்டு களித்தனர்.
கோவை தமிழறிஞர் ,குறள் யோகி ,முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்களுக்கு, குறள் நெறிச் செம்மல் விருது மேல்மருவத்தூரில் (2-4-2022) நடந்த மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றத்தின் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் முப்பெரும் விழாவில் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

நிறைவாக மதுரை திரு. பா.தண்ணாயிர மூர்த்தி அவர்கள் நன்றி நவில,இரவு விருந்துணவுடன் விழா இனிதே நடந்தேறியது.
அறிக்கை,   
தமிழ்ப்பிரியன்.       
மன்றச் செயலாளர் 


Vettai Email-vettai007@yahoo.com

1 Comments

Previous Post Next Post