காதல் ஒரு பூந்தோட்டம் கானமயிலே
காலம் எல்லாம் மலர்களின் தோரணங்களே
கன்னியின் எழிலில் கொள்ளை போனேன்
குறுநகை சிந்திட மயங்கிச் சாய்ந்தேன்
பூப் பறிக்க நானும் ஆசையோடு
பெதும்பை மனத்தில் தூது எய்து
மன்மதன் நானும் மலைத்துப் போனேன்
மாநிறத்து அழகி இதயம் கேட்டேன்
நாணல் நீயோ நாணும் பெண்ணே
நாதம் இயற்றும் இதழிலினிலே தேனோ?
Tags:
கவிதை