பதில் இல்லை!

பதில் இல்லை!


வசந்தம் வீசவில்லை 
வாழ்க்கை மணக்கவில்லை.
வலியோடு தினம் வாழ்க்கை
அதனால் வாழ்வும்  பிடிக்கவில்லை.

ஏமாற்றமே ஏணியாவதால் 
இவ்வுலகம் பிடிக்கவில்லை.
இன்பம் கரைந்து துன்பம்
கொடையாவதால் 
பூலோகம் பிடிக்கவில்லை.

கண்களிலே கண்ணீர் 
மட்டும் நிரந்தரமானதால் .
கண்களும் பிடிக்கவில்லை.
மனமோ வாடிய முல்லை.
ஆறுதல் கூறுவாரும் இல்லை.

நிரந்தர உறவும் இல்லை.
நிலையான அன்பும் இல்லை. 
எவரையும் பிடிக்க வில்லை.
எதுகும் பிடிக்கவில்லை.
உரையாடலும் பிடிக்கவில்லை.
ஏன்? என வினா தொடுக்காதீர்கள்.
பதில் என்னிடம் இல்லை. 


Post a Comment

Previous Post Next Post