வசந்தம் வீசவில்லை
வாழ்க்கை மணக்கவில்லை.
வலியோடு தினம் வாழ்க்கை
அதனால் வாழ்வும் பிடிக்கவில்லை.
ஏமாற்றமே ஏணியாவதால்
இவ்வுலகம் பிடிக்கவில்லை.
இன்பம் கரைந்து துன்பம்
கொடையாவதால்
பூலோகம் பிடிக்கவில்லை.
கண்களிலே கண்ணீர்
மட்டும் நிரந்தரமானதால் .
கண்களும் பிடிக்கவில்லை.
மனமோ வாடிய முல்லை.
ஆறுதல் கூறுவாரும் இல்லை.
நிரந்தர உறவும் இல்லை.
நிலையான அன்பும் இல்லை.
எவரையும் பிடிக்க வில்லை.
எதுகும் பிடிக்கவில்லை.
உரையாடலும் பிடிக்கவில்லை.
ஏன்? என வினா தொடுக்காதீர்கள்.
பதில் என்னிடம் இல்லை.
Tags:
கவிதை