இனியொரு இனிய நாள் இலங்கைக்குள் வருமா?

இனியொரு இனிய நாள் இலங்கைக்குள் வருமா?


நித்தமும் துன்பம் 
நித்திரையும் இல்லை 
நிதியும் இல்லை 
நீதியும் இல்லை 
உண்மைக்கும் பஞ்சம் 
உணவுக்கும் பஞ்சம் 
உயிருக்கு  ஊசலாடும் 
உயிர்கள் வாழும் தேசம் 

தொடருகின்ற போராட்டம் 
தொடமுடியாத விலையேற்றம் 
அரிசியில்லை அழகிய நாட்டில் 
அரசியளுக்கு பஞ்சமில்லை 
பைத்தியங்கள் நிறைந்த 
பா(ர்)ராளு மன்றத்தில்  
மக்கள் தேர்ந்தெடுத்த 
மடையர்கள் கூட்டம்
 
மன்றாடுகின்றனர் 
மாண்டுபோன நாட்டை 
மீட்டெடுக்க
படைத்தவனை மறந்து 
பகையை வளர்த்த 
பரதேசிகள் பதுங்கிவாளும் 
காலம் இது 
மக்கள் மனதில் வஞ்சகமில்லை 
மாமனும் மச்சானுமாக 
வாழ்ந்த அழகிய தேசம் 
இன்று...
மன்றாடுகின்றது
மகிழ்ச்சியை தேடி 

விடியலில்லா இரவிலும்
இரவில்லா பகலிலும் 
முடிவில்லா வரிசையில்
முடிந்துபோன கே(GAS)சுக்காக  
முட்டிமோதும் அப்பாவிகள்
மடிந்துபோகும் அவலங்கள்   

இனியொரு இனிய நாள் 
இலங்கைக்குள் வருமா?
இறைவன்தான் தரவேண்டும்
இருந்துதான் பார்ப்போமே!  

1 Comments

  1. இனியொரு இனிய நாள் இலங்கைக்குள் வருமா? ஆம் வரும் மனிதன் மனிதனாக வாழும் காலம் வந்தால் இந்த உலகில் பல பேர் தோல்விக்கு
    காரணம் அவர்களின்
    நம்பிக்கைக்கு உரியவர்களால்
    முதுகில் குத்தப்பட்டதே காரணம்..
    நான் தோல்வியை
    வெறுப்பவன் இல்லை..
    துரோகத்தை வெறுப்பவன்..!

    ReplyDelete
Previous Post Next Post