கோவையில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க சிறப்புக் கூட்டம்

கோவையில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க சிறப்புக் கூட்டம்


தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் கோவை மாவட்ட மையத்தின்  சிறப்புக்கூட்டம் 18.6.22 அன்று கோவை RHR ஹோட்டலில்  கோவை மாவட்டத் தலைவர் திரு.கே. டேவிட் மோகன்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் திரு. கே.ஆர்.செல்வராஜ், மாநில மகளிரணிச் செயலாளர் திருமதி. பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர். தேர்தல் ஆணையாளர் திரு.பக்தவச்சலம் அவர்கள் உறுதி மொழி படிக்க பொறுப்பாளர்கள் தம்  பொறுப்பினை ஏற்றுக் கொண்டனர்.


அவர்கள் அனைவரும்  கதராடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்

மாநில நிர்வாகிகள், இயக்க மூத்த முன்னோடிகள் வாழ்த்துத் தெரிவித்தனர். விழாவில் திருக்குறள் தூதர்,முனைவர்  திருமிகு மு.க.அன்வர் பாட்சா அவர்கள் நல்ல பல தகவல்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்வு முறைகளை மத்திய செயற்குழு உறுப்பினர் திரு.பீ.நா.கந்தசாமி அவர்கள் நெறிப்படுத்தினார். மாவட்ட இணைச் செயலாளர் திரு.வசந்தராஜன் அவர்கள் நன்றி கூறினார்.

நிகழ்ச்சி நாட்டுப்பண்ணுடன் இனிதே  நிறைவு பெற்றது

 வேட்டை தமிழ்நாடு நிருபர்  


Post a Comment

Previous Post Next Post