Ticker

6/recent/ticker-posts

Ad Code



பாரியன்பன் நாகராஜன் - கவிதைகள்


 சி ந்திய சிவப்பு 
நிறம்மாறும் முன்னர் 
தண்டனையிலிருந்து 
தப்பித்திருக்கும் குற்றங்கள்.

 து ளிர்த்தது விதை 
ஆகாயத்தின் கருவறையில் 
சூலுற்றது நீர்.

 ச கதியில் விழுந்தாலும்
நிலத்தை உயிர்ப்பிக்கிறது
பறவையின் எச்சம்.

 ப ல மைல்களுக்கப்பாலிருந்து
மலைகளையும் வனங்களையும்
கடந்து வந்த நதி வலியறியாமல்
கடந்து கொண்டிருக்கிறது
என் ஊரையும்.

 யா னையைச் சாய்க்கும்
சாய்த்த யானையை
இழுக்கும்.
அத்தனையும் சாத்தியமாகும்
ஓர் எறும்பு நினைத்தால்!



Post a Comment

0 Comments