இந்தியாவில் தொடரும் அவலம் -இறந்த 7 வயது சிறுவனின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்ற காட்சி

இந்தியாவில் தொடரும் அவலம் -இறந்த 7 வயது சிறுவனின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்ற காட்சி


இறந்த 7 வயது சிறுவனின் சடலத்தை தந்தை ஒருவர் ஆம்புலன்ஸ் இல்லாததால் உறவினர் இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்ற காட்சி கண்கலங்க வைத்துள்ளது.

இந்திய மாநிலமான ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் கையில் பணம் இல்லாத காரணத்தினால் இறந்து போன 7 வயது மகனின் சடலத்தை இவ்வாறு ஏற்றிச் சென்றுள்ளார்.

குறித்த சிறுவன் வயலில் விளையாடிக் கொண்டிருந்த போது பாம்பு கடித்ததையடுத்து, உடனே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கிவந்த நிலையில், மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்ததில் சிறுவன் வரும் வழியிலேய இறந்து போனது தெரியவந்துள்ளது.

இறந்து போன மகனை தூக்கிச் செல்ல இலவச ஆம்புலன்ஸ் இல்லாமலும், கையில் பணம் இல்லாத காரணத்தினால் சடலத்தை உறவினரின் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளது கண்கலங்க வைத்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post