ஐபிஎஸ் அதிகாரி திபன்ஷு கப்ரா ட்விட்டரில் பதிவு செய்த வீடியோவை பார்த்தால் மனம் பதரும். அந்த குழந்தை பெட்ஷீட்டின் உதவியுடன் ஏறுவதையும், அவரது தாயும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் குழந்தையை மேலே இழுப்பதையும் காணலாம். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவி, நெட்டிசன்கள் கொந்தளித்து கருத்து தெரிவித்துள்ளனர். தனது குழந்தையை விட புடவை தானா முக்கியம் என கடுமையான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
Appalled to see this video of a mother from #Faridabad!
— Dipanshu Kabra (@ipskabra) February 11, 2022
Heights of carelessness, insensitivity & irresponsibility.
She has no right to risk her kid's life. pic.twitter.com/uNj362e9UO
குறிப்பிட்ட அந்தப் பெண்மணி, புடவை எடுப்பதற்கு யாருடைய உதவியையும் அல்லது ஆலோசனையையும் நாடவில்லை. ஒருதலைப்பட்சமாக தனது மகனின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், அபாயகரமான வகையில் முடிவு எடுத்து, மகனின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
"அவ்வளவு ஆபத்தான ஒன்றைச் செய்வதற்குப் பதிலாக அவள் குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களையோ, அல்லது குயிருப்பின் பராமரிப்பு அலுவகத்தையோ தொடர்புகொண்டிருக்க வேண்டும்" என்று பக்கத்து வீட்டுக்காரர்களும் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணுக்கு குடியுயிருப்பின் பராமரிப்பு அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Vettai Email-vettai007@yahoo.com
Tags:
இந்தியா