Ticker

6/recent/ticker-posts

திலினி பிரியமாலி விசாரணைக்காக உலக வர்த்தக நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்


நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலிக்கு நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை வழங்கியுள்ளது.

இதற்கமைய நிதி மோசடி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலி இன்று (12) கொழும்பு உலக வர்த்தக நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் அவர் அழைத்து வரப்பட்டுள்ளார்.

நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட விசேட உத்தரவின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் அவரை விசாரணைக்காக உலக வர்த்தக நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேலதிக விசாரணைக்காக அவர் மேலும் மூன்று இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments