அதே சமயம் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) அண்மையில் ஜனநாயகக் கட்சி தொடர்பான பேரணி ஒன்றில் பங்கேற்று பேசிய போது, "நாம் ஈரானை நிச்சயம் விடுவிப்போம்.
தற்போது ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்கள், விரைவில் அவர்களே அவர்களை விடுவித்துக் கொள்வார்கள்" என்று தெரிவித்தார்.
ஜோ பைடனின் இந்தக் கருத்துக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி (Ebrahim Raisi) பேசிய போது, "ஈரான் 43 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை அடைந்துவிட்டது.
1979-ம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு ஈரான் தன்னை விடுவித்துக் கொண்டது என்பதை அமெரிக்க ஜனாதிபதிக்குக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" என்று பதிலளித்துள்ளார்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்