திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-60

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-60

குறள் 746
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.

மாப்ள.. ஒரு போர்க்களத்துல போருக்கு என்னென்ன தேவையோ அதெல்லாம் சரியா இருக்கணும். எதிரிகளிடம் போரிடுவதற்கு வலிமையான, திறமையான வீரர்கள், இருக்கணும். 

இந்த ரெண்டுந்தான் மாப்ள, ஒரு நாட்டுக்கு நல்ல பாதுகாப்பு. 

குறள் 747
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.

மாப்ள.. முற்றுகை செஞ்சோ, முற்றுகை செய்யாமலோ, இல்லை கோட்டைக்குள்ள இருக்க ஸ்லீப்பர் செல் மூலமா வஞ்சகம் செஞ்சோ, எதிரிங்க நம்ம கோட்டையை கைப்பற்ற முயற்சிக்கலாம். 

அது எதுக்கும் இடங் கொடுக்காத அளவு பாதுகாப்பா இருக்கது தான் மாப்ள சிறந்த அரண். 

குறள் 748
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.

மாப்ள... கோட்டையைப் பிடிக்க வந்த எதிராளிங்க நல்ல வலிமையா இருப்பாங்க. அவங்களை உள்ளே இருந்துகிட்டே போரிட்டு சமாளிச்சு வெற்றி பெறணும். இப்படி இருக்கது தான் சிறந்த அரண் மாப்ள. 

குறள் 749
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.

மாப்ள.. போர் நடக்குன்னு வச்சுக்கொயேன். அப்பம் கோட்டைக்கு உள்ளே இருந்தபடியே, எதிரிகளைத் தாக்கி, அவர்களை வென்று சாய்க்கும் படி இருப்பது தான் அரண் மாப்ள. 

குறள் 750
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.

மருமவன.. அரண்மனையச் சுத்தி பாதுகாப்பு நிறைந்த பலமான கோட்டை இருக்கலாம். ஆனா உள்ளே இருக்க ஆளுங்க திறமைஇல்லாதவர்களாக இருந்தா, ஒரு பயனும் கிடையாது மருமவன. 

குறள் 751
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
மேலும்.....  செந்தமிழ் இலக்கியம் படிக்கவும்
மாப்ள.. மதிக்கவே கூடாத ஒரு ஆளு இருப்பான். ஆனா, அவங்கிட்ட கொட்டிக் கிடக்கும் பொருளாதார வசதி மத்தவங்களை அவனை மதிக்க வச்சிரும். வேற எதாலயும் அப்படிச் செய்ய முடியாது மாப்ள.
(தொடரும்)






 


Post a Comment

Previous Post Next Post