வாறாயோ வெண்ணிலாவே!

வாறாயோ வெண்ணிலாவே!


விண்ணிருந்து இறங்கி
வாறாயோ வெண்ணிலாவே
என்னைத் தொட்டிடுவாயோ
நீயும் உன்னுடலினாலே

சன்னலிடுக்கினால் நித்தமும்
முத்தம் கொடுத்திடுவாயோ
தன்னாலே எந்நாளும் 
கண்ணுக்குள்ளே உலாவிடுவாயோ

முற்றத்தில்  நானுறங்கையிலே 
விளக்காக விழித்திடுவாயா
என்னவளின் வதனம் 
கண்டதுமே வியர்ந்திடுவாயா 

முந்தானை தொடுகையிலே
முகத்தை மறைத்திடுவாயா
காமத்ப்பால் உணர்ந்தவளாய் 
நாணத்தை அழைத்திடுவாயா 

வெண்முகில் கண்டதுமே
விலகியே நின்றிடுவாயா
இல்லையெனில் இவ்விடம் 
வேண்டாமென்று விரைந்திடுவாயா 
கலா


 


Post a Comment

Previous Post Next Post