மேலும் இரவுப்பணி என்றால் அய்யனார் நகரப்பகுதியில் உள்ள ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்குவது வழக்கம். இதனிடையே நேற்று இரவு பணி முடிந்து அறைக்கு வந்த நிலையில், நள்ளிரவில் அய்யனார் நைலாம் கயிறு மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனையடுத்து சக ஊழியர்கள் அவரது தந்தையான அரிக்கிருஷ்ணனிடம் தகவல் தெரிவித்ததை அடுத்த, அவர் ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் போலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், நேற்று மாலை அய்யனாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதனிடையே போலிஸார் நடத்திய விசாரணையில் அய்யனார் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அவரது மனைவிக்கு அவர் பேசி அனுப்பிய ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது.
அதில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்தாதால், தற்கொலை செய்து கொண்டதாகவும், மேலும் தற்கொலை செய்துகொண்ட அன்று கூட ரூ.50 ஆயிரம் இழந்ததாக அழுதுகொண்டே பேசிய அவர், ஆன்லைன் விளையாட்டை விடாலாம் என நினைத்தாலும் விடமுடியவில்லை என்பதால் தற்கொலை செய்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் விளையாட்டின் மூலம் இளைஞர் பணத்தை இழந்து தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
kalaignarseithigal
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
தமிழ்நாடு